Close

    தானியங்கி மின்னஞ்சல்

    email service

    சிஐஎஸ் மென்பொருளானது, வழக்குகளின் நிலை, அடுத்த விசாரணைக்கான தேதி, வழக்குப் பட்டியல், தீர்ப்புகள் மற்றும் ஆணைகள் போன்ற விவரங்களுடன் வழக்காளர்கள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு தானாகவே மின்னஞ்சல்களை அனுப்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தும் பயனாளர், சிஐஎஸ் மென்பொருளில் தனது மின்னஞ்சலை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், வழக்காளர்கள், வழக்குரைஞர்கள், பதிவுசெய்யப்பட்ட சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் அரசு துறைகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. வழக்குப் பட்டியல்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளான அடுத்த தேதிகள், வழக்கு மாற்றப்படுதல் மற்றும் தீர்வு செய்யப்படுதல் போன்ற அன்றாட அறிவிப்புகளை உருவாக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆணைகள்/தீர்ப்புகளை பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் அனுப்ப இது உதவுகிறது.