Close

    மாண்புமிகு நீதியரசர் திரு.பூஷண் ராமகிருஷ்ணாகவாய், இந்திய தலைமை நீதியரசர்

    Justice Bhushan Ramkrishna Gavai Chief Justice of India
    • பதவிப்பெயர்: தலைமைப் புரவலர்

    பிறந்த தேதி : 24-11-1960

    பதவிக் காலம் : (நியமன நாள்) 24-05-2019 முதல் (பணிஓய்வு நாள்) 23-11-2025

    1960-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று பிறந்தார்.

    அமராவதியில் 1960-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் நாளன்று பிறந்தார். 1985-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் நாளன்று வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கினார். 1987-ஆம் ஆண்டு வரையில் முன்னாள் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசரான மறைந்த திரு.ராஜா எஸ்.போன்ஸ்லேஉடன் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரையில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் சுயாதீனமாக வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் முதன்மையாக பணியாற்றினார்.

    அரசியலமைப்புச் சட்டத்திலும் மற்றும் நிர்வாக சட்டத்திலும் வழக்குறிஞராக பணியாற்றினார். நாக்பூரின் நகராட்சி கழகம், அமராவதி நகராட்சி கழகம் மற்றும் அமராவதி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிலையான வழக்குரைஞராக பணியாற்றினார். சிகாம், டிசிவிஎல் போன்ற பல தன்னாட்சி உரிமையுள்ள அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், விடர்பா மண்டலத்தின் பல நகராட்சி மன்றங்கள் சார்பில் தொடர்ச்சியாக முன்னிலையானார்.

    ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் மற்றும் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக பணியாற்றினார். 17, ஜனவரி 2000-ஆம் தேதியன்று நாக்பூர் அமர்வின் மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் மற்றும் குற்றவியல் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். 14, நவம்பர் 2003-ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

    2005 நவம்பர் 12-ஆம் தேதியன்று பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதியரசரா நியமிக்கப்பட்டார். மும்பையில் உள்ள தலைமை அமர்விலும் மற்றும் நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் அனைத்து வகையான வழக்குகளையும் விசாரிக்கும் அமர்வுகளுக்கு தலைமை தாங்கினார். மே 24, 2019-ஆம் தேதியன்று இந்திய உச்சநீதிமன்ற நீதியரசரா நியமிக்கப்பட்டார்.

    கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்டம், உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், இசைவுப் பொதுவர் சட்டம், மின்சார சட்டம், கல்வி விவகாரங்கள், சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கையாளும் சுமார் 700 அமர்வுகளில் பங்கு வகித்தார்.

    பல்வேறு பிரச்சினைகளில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புரைகள் உட்பட சுமார் 300 தீர்ப்புரைகளை வழங்கியுள்ளார்.

    உலான்பாதர் (மங்கோலியா), நியூயார்க் (அமெரிக்கா), கார்டிஃப் (பிரிட்டிஷ் கூட்டரசு) மற்றும் நைரோபி (கென்யா) ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றார்.

    கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விரிவுரையாற்றினார்.

    2025 நவம்பர் 23-ஆம் தேதியன்று பணிநிறைவு பெறவுள்ளார்.